திருப்பதியில் சர்வதேச தரத்துடன் ரூ.350 கோடி மதிப்பீட்டில் உருவாகும் ரயில் நிலையம்.!
International standard railway station at Tirupati
திருப்பதியில் சர்வதேச தரத்துடன் ரூபாய் 350 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா, காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரயில் நிலையம் அமைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச தரத்துடன் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலைய பயணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
International standard railway station at Tirupati