நாக்பூரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்.! வால்பகுதி தரையில் தட்டியதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாக்பூரில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்.! வால்பகுதி தரையில் திட்டியதால் பரபரப்பு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாக்பூர் நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து இந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

அப்போது விமானத்தின் வால்பகுதி திடீரென தரையில் மோதியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, அந்த விமானம் உடனடியாக ஆய்வு மற்றும் பழுது நீக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தத் தகவலை இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 

விமான நிலையத்தில் விமானம் புறப்படும் போதோ அல்லது தரையிறங்கும் போதோ அதன் வால்பகுதி தரையில் தட்டும் போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indigo flight tails hit on ground at nakpur airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->