புதிதாக 500 ஏர்பஸ் விமானங்களை வாங்க இண்டிகோ நிறுவனம் கையெழுத்து.! - Seithipunal
Seithipunal


புதிதாக 500 ஏர்பஸ் விமானங்களை வாங்க இண்டிகோ நிறுவனம் கையெழுத்து.!

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ நிறுவனம். இந்த நிறுவனம், புதிதாக 500 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது. 

அதுவும், ஒரே தவணையில் 500 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாவது வணிக விமான சேவை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். 

இதற்கு காரணம் விமானத்தில் பயணிப்பவர்களின் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், உலகளாவிய மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனங்களிடையேயான போட்டிதான் என்றுக் கருதப்படுகிறது. 

மேலும், இந்த விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் 2030-2035-க்குள் வினியோகம் செய்யவுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏர் இந்தியா 470 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indigo company sign for buy five hundrad air bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->