இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிகாலையில் குலுங்கிய பிரேசில்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 

இந்த நிலநடுக்கம் தென்மேற்கு இந்திய ரிட்ஜ் பகுதியில் அதிகாலை 3:39 மணியளவில் உணரப்பட்டது. இந்த இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இதனை அடுத்து பிரேசில் நாட்டில் மேற்கு பகுதிகளிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Ocean Powerful earthquake


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->