கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 3,720 பேருக்கு தொற்று உறுதி.!
India 3720 new covid cases in 24 hours
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை தற்பொழுது குறைந்து வருகிறது. இதில் நேற்று 3 ஆயிரத்து 325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,720 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கேரளாவில் 5 பேர் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 20 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து 7,698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 40,177ஆக குறைந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ், இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
English Summary
India 3720 new covid cases in 24 hours