4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்பொழுது குறைந்து வருகிறது. இதில் நேற்று 4 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,325 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கேரளாவில் ஏழு பேர் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 17 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,379 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175ஆக குறைந்துள்ளது. இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India 3325 new covid cases in 24 hours


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->