வெவ்வேறு இடத்தில் உடல் அடையாளம் தெரியாத வகையில் பெண்கள் கொலை.. உத்திரபிரேதேசத்தில் பகீர்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜுனூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் பெண்ணொருவரின் சடலம் எரிந்த நிலையில் இருந்துள்ளது. இந்த பெண்ணின் சடலம் கட்டிலில் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. 

இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண்ணை மர்ம நபர்கள் கட்டிலில் வைத்து உயிருடன் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் துப்பாக்கி குண்டுகளும் இருந்துள்ளது. 

இதனையடுத்து இவரை மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்து எரித்தனரா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண் யார்? எதற்க்காக கொலை செய்யப்பட்டார்? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது ஏதும் தெரியவராததால் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

பெண்ணின் உடலை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் தெரிவித்த நேரத்தில், பெண்ணின் டி.என்.ஏ தொடர்பான மாதிரியை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்த பெண்ணின் அடையாளம் தொடர்பான விஷயம் தெரியவந்த பின்னரே, இவர் எதற்க்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான தகவல் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனைப்போன்று அங்குள்ள பக்ராரிச் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் உடல் மற்றும் முகத்தில் பெண் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttar predesh two girl murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->