மது போதையில் 16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்கார முயற்சி.. தெலுங்கானாவில் பயங்கரம்.!!
in Telangana girl sexual torture by gang police arrest and investigate
தெலுங்கானா மாநிலத்தில் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போதை காமுகர்களிடம் இருந்து தப்பிய 16 வயது சிறுமியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் நகரத்தில் உள்ள வாணி நகர் பகுதியில் 16 வயதுடைய சிறுமி பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நேரத்தில், சிறுமி தனியாக பணியாற்றிவருவதை அறிந்த 3 காம கொடூரன்கள், சிறுமியை காரில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். சிறுமியை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இவன்கள் மூவரும் மது போதையில் இருந்த நிலையில், இவன்களின் பிடியில் இருந்து அதிஷ்டவசமாக தப்பித்த சிறுமி இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்திற்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியை காவல் துறையினர் மீட்ட நேரத்தில் அவரது ஆடைகள் கிழிந்து, காயத்துடன் இருந்துள்ளார்.
சிறுமியிடம் கொடூரங்களின் அடையாளத்தை அறிந்துகொண்டு, சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் தொடர்பாக இளைஞன் ஒருவனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Telangana girl sexual torture by gang police arrest and investigate