பாதுகாப்பு அளித்த காவலதிகாரியை நொறுக்கியெடுத்த பெண்மணி.! ஓணான் வேட்டிக்குள் பாய்ந்த கதையாக மாறிய சோகம்.!!
in telangana girl attack police drinks after cure morning
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தின் சரகத்திற்கு உட்பட்ட சாலையில் பெண்ணொருவர் மதுஅருந்திவிட்டு போதையில் விழுந்து கிடந்துள்ளார்.
இவரை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த மகளீர் காவல் துறையினர்., இளம்பெண்ணின் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளனர்.
போதையில் எங்கு சென்றோம் என்பது கூட தெரியாமல் கிடந்த பெண்ணிற்கு காவல் துறையினர் உதவி செய்திருந்த நிலையில்., காலையில் போதை தெளிந்து எழுந்த பெண் தன்னை எதற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள்? என்று கேட்டுள்ளார்.
மேலும்., இந்த சமயத்தில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவல் அதிகாரிகளை அடித்து., காவல் நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். இவரை தடுத்து நிறுத்திய பெண் காவல் அதிகாரியின் கழுத்தில் நகத்தினால் பதித்த நிலையில்., இரண்டு பெண் காவலர்களின் கைகளை கடித்துள்ளார்.
இதனையடுத்து காலையில் எழுப்பி புத்தி கூறி வீட்டிற்கு அனுப்பலாம் என்று காவல் துறை அதிகாரிகள் பேசியிருந்த நிலையில்., இவர் செய்த செயலால் இவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில்., இவர் நாகலாந்து மாநிலத்தை சார்ந்த லீசா என்பதும்., இவர் அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மீது பெண் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in telangana girl attack police drinks after cure morning