அழகுநிலையம் என்ற பெயரில் அரங்கேறிய விபச்சாரம்.. உல்லாசத்தின் போதே கையும் களவுமாக மாட்டிய வாடிக்கையாளர்..!!
in Prostitution gang arrest by police in puthuchery
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முதலியார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில், பெரியளவிலான விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று காவல் துறையினர் அழகு நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், அழகு நிலையத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து கொண்டு இருந்த திண்டிவனம் பகுதியை சார்ந்த சரவணன் என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியதும், இந்த விபச்சாரம் அங்குள்ள எல்லைப்பிள்ளை பகுதியை சார்ந்த ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ என்பவர் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், அழகு நிலையத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு மசாஜ், ஸ்பா செய்து பெண்களுடன் வெளியிடத்திற்கு அனுப்பி வைத்து உல்லாசமாக இருக்க வைத்ததும், அழகு நிலையத்திற்கு உள்ளேயே உல்லாசமாக இருக்க அனுமதி செய்ததும் தெரியவந்துள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட சென்னை மற்றும் மதுரை பகுதியை சார்ந்த 5 பெண்கள் வரவழைக்கட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்களை அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Prostitution gang arrest by police in puthuchery