நாடக காதலை ஏற்க மறுத்த மாணவியை நடுரோட்டில் குத்தி கொலை செய்த கொடூரம்.!! மீண்டும் தலைதூக்கும் நாடக காதல்.!!
in mumbai girl killed by drama love culprit
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. பெண்களை நாடக காதல் என்ற வலையில் விழவைத்து., அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதும் - நாடக காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொலை செய்யும் கொடூரமும் அரங்கேறி பெரும் துயரை ஏற்படுத்துகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தை சார்ந்தவன் துஷார் கிரண் மாஸ்கி (வயது 22). இவனது வீட்டிற்கு அருகேயே 19 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில்., சிறுமியை துஷார் ஒரு தலையாக காதலித்து வருவதாக மனதில் எண்ணத்தை எழுப்பி கொண்டு நாடக காதல் எண்ணத்தை வளர்த்து வந்துள்ளான்.
இந்த நிலையில்., சிறுமியிடம் பல முறை காதலை தெரிவித்த சமயத்தில்., காதலை சிறுமி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாடக காதல் கொடூரன்., சிறுமி நேற்று 02.30 மணிக்கு பள்ளிக்கு சென்று திரும்பிய நிலையில் பின்தொடர்ந்து மீண்டும் சிறுமியிடம் காதலை கூறி காதலிக்க வற்புறுத்தியுள்ளான்.
இதனை ஏற்க மறுத்த சிறுமி வழியை விடுமாறு கூறவே., சிறுமி சற்றும் எதிர்பாராத நேரத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். வயிற்றில் பல முறை கத்திக்குத்து வாங்கிய நிலையில்., சம்பவ இடத்திலேயே சிறுமி மயங்கி விளைவே., இதனை கண்ட மக்கள் பதறியபடி சிறுமியை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியை மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள்., சிறுமியின் உயிர் வரும் வழியிலேயே பிறந்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த துயரத்தை அறிந்த பெற்றோர்கள் மகளின் உடலை கட்டியணைத்து கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்., இந்த துயரம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்த நிலையில்., விசாரணை மேற்கொண்டு சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த நாடக காதல் கொடூரனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்., தமிழகத்தில் நடந்த நாடக காதல் கொலைகளை போன்று அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in mumbai girl killed by drama love culprit