மின்கசிவு ஏற்பட்ட வயரை எதிர்பாராது மிதித்த சிறுவனுக்கு நேர்ந்த பெரும் சோகம்..! வெளியான பேரதிர்ச்சி வீடியோ பதிவு.!!
in Mumbai child attack by dangerous electricity power
இந்த உலகில் பலரும் பலவிதமான காரணங்கள் பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுவதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்., மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் நவிமும்பை கோ பர்தேர் பகுதியில் இருக்கும் சாலையில்., சுபம் சோனி என்ற சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் சாலைக்கு கீழே செல்லும் மின் வயர் ஆனது வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. இந்த வெளியே நீட்டிக்கொண்டிருந்த வயரை காணாத சிறுவர்., சென்று கொண்டு இருந்த நிலையில்., சிதலமடைந்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு உள்ளது.
இதனை கவனிக்காமல் சிறுவன் சென்று அந்த மின் கம்பியின் மீது மிதித்ததை அடுத்து., சிறுவனின் மீது மின்சாரம் பாய்ந்து குண்டுவெடிப்பு போல தீப்பிழம்பு ஏற்பட்டது. இதனையடுத்து சோனியின் ஆடையில் தீப்பற்றி எரிந்த நிலையில்., இரண்டு கால்களும் தீப்பிடித்து எரிந்தது.
கடும் வேதனையை தாங்க முடியாமல் அங்கிருந்து அங்கும் - இங்குமாய் ஓடியுள்ளார். இதனையடுத்து உயிரை காப்பாற்றிக்கொள்ள., அங்கு இருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த தண்ணீரை வைத்து., தீயை அனைத்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில்., இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர்., அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில்., இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்., இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Mumbai child attack by dangerous electricity power