பீடி வாங்கி தரமறுத்த அதிகாரியை அடித்த கைதி.! நீதிமன்றத்தில் பரபரப்பு.!!
in Kerala culprit attack police
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் ஆயுதப்படை காவல் அதிகாரியாக இருப்பவர் ஜோயி கே.ஜோகி (வயது 34) மற்றும் மனு கிருஷ்ணன் (வயது 32).
இவர் நேற்று திருச்சூரில் உள்ள மத்திய சிறையில் இருக்கும் எர்ணாகுளம் பகுதியை சார்ந்த இன்னஷா (வயது 30) என்ற குற்றவாளியை திருச்சூர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியை செய்துள்ளார்.
குற்றவாளியான இன்னஷா பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள நிலையில்., விசாரணைக்கு திருச்சூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு தாமதமாகியுள்ளது.
இந்த நேரத்தில் இன்னஷா தனக்கு பசிக்கிறது என்று கூறி சாப்பாடு வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்களிடம் கூறிவிட்டு கைதியை உணவகத்திற்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சாப்பிட்ட பின்னர் தனக்கு பீடி வேண்டும் என்று கூறவே., பீடி வாங்கி தர இயலாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கைதி காவல் அதிகாரி ஜோயியின் தலையில் விளங்கினால் தாக்கியுள்ளார்.
இதனால் ஜோயிக்கு பலத்த காயமடைந்த நிலையில்., கைதியை சமாதானம் செய்துவிட்டு காவல் அதிகாரியை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்., கைதி இன்னஷாவின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Kerala culprit attack police