கடன் வாங்கிய பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்.! வைரலாகும் வீடியோ பதிவு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியை சார்ந்த பெண் ராஜாமணி (வயது 36). இவர் அங்குள்ள பகுதியில் சிறிய அளவிலான உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாது சிட்பண்ட் தொழிலையும் செய்து வருகிறார். 

இந்த நிலையில்., உணவகத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தேவையான பணத்தை., அங்குள்ள சிலரிடம் கடனாக வாங்கி கடைக்கு பொருட்கள் வாங்குவது வழக்கம். அந்த வகையில்., ரூ.50 ஆயிரத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக கடனாக பெற்றுள்ளார். 

இந்த பணத்தை திரும்பி தராமல் இருந்த நிலையில்., கடனை பெறுவதற்காக கடன் கொடுத்தவர்கள் அனைவரும் நேற்று ஒன்று திரண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை..

இதனால் ஆத்திரம் அடைந்த கடன் கொடுத்தவர்கள் பெண்ணை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பான விடியோவானது இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து., இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga girl attack due to loan problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->