வீட்டில் இருந்த கத்தி மற்றும் 8 கரண்டியை தின்று தீர்த்த நபர்.! அதிர்ச்சியான மருத்துவர்கள்.!!
in himachal pradesh man eating knife brush and spoons. doctors shocked
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்டி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு கடுமையான வயிற்று வலியானது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வயிற்றை ஸ்கேன் செய்ய முடிவு செய்த மருத்துவர்கள்., இவரது வயிற்றை ஸ்கேன் செய்துள்ளனர்.
அந்த சமயத்தில்., அவரது வயிற்றில் கத்தி மற்றும் கரண்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து., அந்த கத்தி மற்றும் கரண்டிகளை வெளியெடுத்தனர்.
அவரது வயிற்றில் மொத்தமாக சுமார் எட்டு கரண்டிகள்., ஒரு கத்தி., ஒரு திருப்புளி., இரண்டு பல் துலக்கும் பிரஷ் மற்றும் ஒரு இரும்பு துண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நோயாளி நல்ல நிலையில் இருக்கும் நிலையில்., இது குறித்து மருத்துவர்கள் பேச முன்வந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி பகுதிக்கு அருகில் இருக்கும் சுந்தர் நகர் பகுதியைச் சார்ந்தவர் கடுமையான வயிற்று வலியின் காரணமாக அவதியுற்று வந்தார். இவரை மீட்ட உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து சமயத்தில்., அவருக்கு நாங்கள் பரிசோதனை செய்தோம்.
அந்த சமயத்தில் அவரது வயிற்றில் கத்தி மற்றும் கரண்டிகள் போன்றவை இருந்துள்ளது என கண்டு அதிர்ச்சியடைந்து சுமார் நான்கு மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு., அனைத்தையும் வெளியெடுத்தோம்.
இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் போது எங்களுக்கு அதிகமான சிரமம் இருந்தது. ஏனெனில்., வயிற்றில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் கூறாக இருப்பதன் காரணமாக அவரது உயிர் ஊசலாடுவதற்கும் வாய்ப்புள்ளது., நல்ல வேளையாக எந்தவித பாதிப்பும் இன்றி வெளியே எடுத்தால் தற்போது அவர் நலமாக உள்ளார் என்று டாக்டர் சுராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
in himachal pradesh man eating knife brush and spoons. doctors shocked