பாலம் பாம் வைத்து தகர்ப்பு... நக்சல்கள் நாசவேலை.!!
in Chhattisgarh Naxals collapse bridge using bomb
இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை கையில் எடுத்து போராடி வருகின்றனர்.
இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், காவல் துறையினர் மற்றும் இராணுவ துறையினர் இவர்களின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல் மற்றும் கொடூர கொலை சம்பவங்கள் போன்றவை அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், சத்திஸ்கர் மாநிலத்தில், அங்குள்ள டோர்னபால் முதல் ஜகர்குண்டா பகுதியை இணைக்கும் சாலையில் பாலம் உள்ளது.
அப்பகுதியில் உள்ள கோரவுண்டா பகுதியில் இருக்கும் பாலத்தில் வெடிபொருட்களை நிரப்பிய நக்சலைட்டுகள், இப்பாலத்தினை தகர்த்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chhattisgarh Naxals collapse bridge using bomb