மீண்டும் துப்பாக்கி சண்டை..! இந்திய இராணுவம் அதிரடி.!!
in bandipora jammu kashmir 2 terrorist killed by indian army
இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு., ஜம்மு காஷ்மீர் மாநிலமானது இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க பலத்த பாதுகாப்பானது போடப்பட்டது. மேலும்., பல்வேறு கட்டுப்பாடுகளும் அதிரடியாக விதிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாது பயங்கரவாத தாக்குதலுக்கும் வாய்ப்புள்ளதாக அடுத்தடுத்து தகவல் வெளியானதால் இராணுவம் தீவிரமாக கண்காணித்து வந்தது. மேலும்., பாக்கிஸ்தான் ஆதரவோடு பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில்., ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து., பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது பயங்கரவாதிகள் - இராணுவத்தினர் வந்திருப்பதை அறிந்து துப்பாக்கியால் சுட துவங்கினர். இதனைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு., அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in bandipora jammu kashmir 2 terrorist killed by indian army