காதல் மனைவியின் போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன்.. பின்னர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பரிதாபம்.!
husband killed wife
ராஜஸ்தானைச் சேர்ந்த அஜஸ் முகமது கான். இவர் பணிபுரியும் இடத்திலேயே நைனா மங்ளானி என்ற பெண்ணை காதலித்துள்ளார். இதைதொடர்ந்து இரு வீட்டு சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
நைனா எப்போதுமே பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்துவார். திருமணத்திற்கு பிறகு நைனா அவரது கணவருடன் நேரத்தை செலவிடாமல் பேஸ்புக்கை பயன்படுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முகமது நைனாவின் செல்போனை எடுத்து பார்த்ததில் ஃபேஸ்புக் நண்பர்களுடன் அதிகளவில் சேட் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டவுடன் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, நைனா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இதனைத்தொடர்ந்து நைனாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் இருவரும் ஒன்றாக பல இடங்களை சுற்றி உள்ளனர். அப்போது நைனா பேஸ்புக்கை மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் நைனாவை டெல்லி ஜெய்ப்பூர் ஹைவேஸ் சாலைக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் மனைவியின் முகத்தில் கல்லைப் போட்டு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹைவேஸ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.