ஆரஞ்சு அலர்ட் || மக்களே உஷார்!! இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று கனமழை பெய்யும்!! - Seithipunal
Seithipunal


அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருவதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிறை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் மண்சரிவு, நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், பேரிடர் மீட்பு பணிகளில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட வேண்டும் எனவும், யாரும் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் தடை விதித்து 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain Orange Alert for Idukki District


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->