பேண்ட் வாத்தியத்திற்கு யார் பணம் தருவது.. கல்யாணத்தை நிறுத்திய மணமகன்..!
Groom Stop the marriage
பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் செலுத்துவது என்ற தகராறில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசம், சஹரன்பூர் மாவட்டம், மிர்சாபூரை சேர்ந்தவர் தர்மேந்திரா. இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக ஃபரூக்காபாத்தில் இருந்து உள்ள மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை அழைத்து வந்துள்ளனர். திருமணம் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது பேண்ட் வாத்திய குழுவினர் மணமகனிடம் பணம் கேட்டுள்ளனர்.
அப்போது, மணமகள் குடும்பத்தினரிடம் கொடுக்க பணம் கூறியுள்ளனர். இதற்கு அவர் மணமகள் தரப்பினர் இசைக்குழுவை வரவழைக்கவில்லை எனக் கூறி, பணம் தர இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் மணமக்களும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், தான் அவமானப்பட்டு விட்டதாக மணமகன் மணமேடையில் இருந்து வெளியேறினார். பேண்ட் வாத்திய குழுவின் கட்டணத்தை செலுத்துவதற்கு சண்டயிட்டு திருமணம் தடைப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.