அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு கீழே படுக்கை... அரசு மருத்துவமனையில் அரங்கேறும் அவலம்..!
government hospital worst treatment
இந்தியாவின், மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளுள் ஒன்றான படுக்கை வசதிகள் கூட இல்லாததால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் கைகளால் தூக்கி வரப்பட்டு அறை ஒன்றில் கீழே படுக்க வைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் உறவினர்களால் தூக்கி வரப்பட்ட பெண்கள் அறை ஒன்றில் எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் கீழே வரிசையாக படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு நாளைக்கு 30 பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
English Summary
government hospital worst treatment