ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு - ரயில்வே துறை.! - Seithipunal
Seithipunal


ரயில்வே சார்பில் ரயில்களின் ஏசி பெட்டிகளில் வழங்கப்பட்டு வந்த போர்வை, கம்பளிகள் வசதிகளை மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில்வே சார்பில் ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் வழங்கப்பட்டு வந்தது. ரயில்வே வழங்கிய இந்த வசதி 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல். காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் வசதிகளை மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வரும் மார்ச் 27ம் தேதி முதல் ரயில்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான பயணிகள் பழையபடி மலிவான டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும் இதனால் பயணிகளுக்கு மிகுந்த நிம்மதி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Good news for train passengers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->