மதுபான பாரில் ஆபாச நடனம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
Glamour dance in Mumbai bar
மும்பையில் தனியார் மதுபான போதையில் ஆபாச நடனமாடிய பெண்கள் உட்பட வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை சாந்தகுருஸ் பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக சமூக குற்ற தடுப்பு போலீஸ்சாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு மதுபான பாரில் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பெண்கள் ஆபாச நடனம் மாறியதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து ஆபாச நடனமாடிய 14 பெண்களை மீட்டு மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் பாரில் இருந்த 44 வாடிக்கையாளர்கள் 21 ஊழியர்கள் மற்றும் 4 கலைஞர்கள் என மொத்தம் 69 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அங்கிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Glamour dance in Mumbai bar