மகாராஷ்டிரா || திடீர் தீ விபத்து - பயத்தில் சிறுமி செய்த அதிர்ச்சி செயல்.!
girl died in maharastra from second floor
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை சேர்ந்த பெண் ஒருவர், தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தின் ராம்புரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இவர்கள் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தபோது அதிகாலை நேரத்தில், வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, சர சரவென இரண்டாவது மாடிக்கு பரவியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏஞ்சல் ஜெயின் என்ற 13 வயது சிறுமி, பயத்தில் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமி, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், சிறுமியின் தாயார் மற்றும் சகோதரர், தீ விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதற்கிடையே இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
girl died in maharastra from second floor