பணத்திற்காக நண்பனை கடத்தி கொலை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், இலாம்பஜாரில் உள்ள பிரபும்  மாவட்டத்தை சேர்ந்தவர் சையத் சாலூதீன். இவர் அங்குள்ள என்ஜீனியரிங் கல்லூரியில் படித்து வந்தார். சனிக்கிழமை  அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற அவர் வீட்டு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அன்றிரவு அவரது தந்தைக்கு அழைத்த மர்ம நபர்கள் அவரது மகனை கடத்தி இருப்பதாகவும் 30 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சையத்தின் தந்தை பணம் தருவதாக கூறிய நிலையில் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் செல்போனை டிராக் செய்தனர். அப்போது , அந்த செல்போன் எண் ஷேக் சல்மான் என்பகருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. சில மணி நேரங்களிலேயே அவர்கள் இடத்தை கண்டுபிடித்தனர்.  அவரை கைக்து செய்து நடத்திய விசாரணையில் சையத் அவரது நண்பர் எனவும் அவரை பணத்திற்காக கடத்தி கொலை செய்ததையும் ஒப்பு கொண்டார்.

இதனை அடுத்தும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friend Kindnap and killed the Friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->