சாலையில் தாறுமாறாக ஓடிய வேன் - 14 பேர் பலி; 21 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தின்டோரி மாவட்டத்தில் வேன் ஒன்று கிராம மக்களை ஏற்றிக் கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு திரும்பி வந்துள்ளது. அப்போது, இந்த வேன் நேற்றிரவு பட்ஜார் என்ற இடத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பதினான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourteen peoples died and 21 peoples injured for accident in madhya pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->