முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே மருத்துவமனையில் திடீர் அனுமதி.!
formar minister eknath khadse admitted hospital
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மேல்-சபை உறுப்பினருமான ஏக்நாத் கட்சே திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி. தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று கூறினார்.
மேலும் அவர், தான் ஏக்நாத் கட்சே மகளும், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவருமான ரோகினி கட்சே உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரோகினி கட்சே நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த வலைதள பதிவில், "கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், எனது தந்தை ஏக்நாத் கட்சே ஜல்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. இது குறித்து கவலைப்பட எந்த தேவையும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்
English Summary
formar minister eknath khadse admitted hospital