7ஆம் வகுப்பு சிறுமியை மிரட்டி பலாத்காரம்... 5 பள்ளி மாணவர்கள் கைது...!
Five schoolboys held for raping 7th Class girl in Chandigarh
பஞ்சாப் மாநிலத்தில் ஏழாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த ஐந்து பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெற்றோர் இதுகுறித்து மாணவியரிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது மாணவியின் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த அதே பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் மாணவியை மிரட்டி பூங்கா உட்பட வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இது குறித்து விசாரணையை செய்த தலைமை ஆசிரியர் சைல்ட் லைன் குழுவினரிடம் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஏழாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஐந்து பள்ளி மாணவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Five schoolboys held for raping 7th Class girl in Chandigarh