உ.பியில் பிரபல ரவுடி ஆதிக் அகமது கொலை வழக்கு - 5 போலீசார் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


உ.பியில் பிரபல ரவுடி ஆதிக் அகமது கொலை வழக்கு - 5 போலீசார் இடைநீக்கம்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமது உள்ளிட்டோரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் கடந்த சனிக்கிழமை பிரயாங்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 

அப்போது, குற்றவாளிகள் இரண்டு போரையும் மூன்று பேர் சுட்டுக்கொன்றனர். போலீசார் கண்முன்னே நடைபெற்ற இந்த சம்பவம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பானது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து நேற்று குற்றவாளிகள் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் அகமது உடல் பலத்த பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று அடக்க்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய சன்னி சிங், லவ்லெஷ் திவாரி, அருண் மவுரியா உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த ஐந்து போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five police officers suspend for up adiq ahamd kill case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->