மத்திய பிரதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து.! 3 பெட்டிகள் எரிந்து நாசம்.!
Fire breaks out in passenger train in Madhya Pradesh
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் ரயில் நிலையத்தில் (புதன்கிழமை)நேற்று பிற்பகல் பயணிகள் ரயில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் எரிந்து நாசமானது.
பெதுல்-சிந்த்வாரா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ரயில்வே காவல்துறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.என்.தாகூர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பற்றிய சமயத்தில் ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் பெதுல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ரயில் புறப்பட இருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Fire breaks out in passenger train in Madhya Pradesh