ஆந்திரா || இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து
Fire accident at Visakhapatnam Steel Plant
ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் விசாக இரும்பு உருக்கு ஆலை அமைந்துள்ளது. இதில் இரும்பு உருக்குவதற்காக மூலப் பொருட்களை கொண்டு செல்லும் பிளான்ட் ஒன்றை மத்திய அரசு ஒப்பந்தம் அடிப்படையில் தனியாருக்கு கொடுத்துள்ளது.
இந்தப் பகுதியில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, மூலப் பொருட்களைக் கொண்டு செல்லும் 37 ஏ கன்வேயர் பெல்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து, அருகில் இருந்த எஸ் -1 கன்வேயர் பெல்ட்டுக்கும் தீ பரவியது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அந்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறினர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தினால் பல லட்சம் மதிப்புள்ள ஆன பொருட்கள் எரிந்து நாசமானது.
English Summary
Fire accident at Visakhapatnam Steel Plant