கட்டுக்கட்டாக சிக்கிய 100 கோடி! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!!
fake money 100 crores in telangana
இந்தியா முழுவதும் தற்போது கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் இதை தடுக்க முடியவில்லை.
தொடர்ந்து பல கோடி கள்ளநோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் பல கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது.
பிடிபட்ட கள்ள நோட்டு மதிப்பு ரூபாய் 100 கோடி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் பழைய 500, 1000 நோட்டுகளையும் தெலுங்கானா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
fake money 100 crores in telangana