10 எண்களில் இருந்து அழைப்பு... முன்னாள் எம்.எல்.ஏ வேதனை! போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ரோஷன் லால் வர்மாவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர், தன்னிடமும் தனது மகளிடமும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வர்மா தெரிவித்திருப்பதாவது, 

பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. தொடர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி புண்படுத்துகின்றனர். 

இந்த துன்புறுத்தல் மனதளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 10 வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும் அந்த எண்களை அவர் குறித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இன்று காலை 2 எண்களில் இருந்து வந்த அழைப்பை வர்மாவின் மகள் எடுத்துப் பேசிய போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மீனாவிடம் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த விசாரணையை சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மீனா தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EX MLA Death threat Call Police investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->