உணவு சாப்பிடுவதற்காக சென்ற எலக்ட்ரீசியன்.! விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் திருமணமான 7 மாதத்தில் எலெக்ட்ரிசியன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காரைக்கால் சேத்திலால் நகரை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அந்தோணி(30). இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அந்தோணி நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக, வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது காரைக்கால் காமராஜர் சாலை அல்லிக்குளத்து தெரு சந்திப்பில் சென்றபோது, பள்ளி மாணவிகள் குறுக்கே சென்றதால், அவர்கள் மீது மோதாமல் இருக்க, எதிர் திசையில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அந்தோனியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician killed in motorcycle accident in Puducherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->