வருடத்தின் முதல் நாளிலே வங்காள விரிகுடா மற்றும் அரியானா பகுதியில் நிலநடுக்கம்.!
earthquake in Bay of Bengal and ariyaana state
உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப்புத்தாண்டு மிகவும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10.57 மணியளவில் வங்காள விரிகுடா பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
36 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று அரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்திலிந்து வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புது வருட தொடக்கத்தின் முதல் நாளான இன்று, இந்தியாவில் அரியானா மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
English Summary
earthquake in Bay of Bengal and ariyaana state