மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று.! - Seithipunal
Seithipunal


மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப்படைத் தளபதிகள் மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லேசான அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் "கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும், அவர்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defence Minister Rajnath Singh tests positive for Covid 19


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->