10 வயது சிறுவனை உயிரோடு விழுங்கிய ராட்சத முதலை.! பெரும் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் ஷியோபோர் பகுதியில் உள்ள சம்பல் ஆற்றில், நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன்  குளிக்க சென்றுள்ளான். 

ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவன், திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டான். 
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஒன்று கூடினர். அப்போது, சிறுவனை ஆற்றில் இருந்த  முதலை ஒன்று விழுங்க முயற்சித்து. இதனை கண்டு  அதிர்ச்சியடைந்த கிராம பொது மக்கள், முதலையின் பிடியில் இருந்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் முதலை சிறுவனை விழுங்கிவிட்டது. 

இதன் பின்னர், கிராம பொது மக்கள் முதலையை வலைவீசி பிடித்து அதன் மீது கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினரும், காவல்துறையினரும் கிராம மக்கள் பிடியில் இருந்து முதலையை விடுவிக்க முயற்சி செய்தனர்.

கிராம பொது மக்கள் முதலையின் வயிற்றில் சிறுவன் உயிரோடு இருப்பான். முதலை அவனை கக்கும் வரை விடமாட்டோம் என்று திட்டமிட்டமாக தெரிவித்தனர்.   வனத்துறையினர் அவர்களை சமரசப்படுத்திய பின்னர் அவர்களிடமிருந்து முதலையை மீட்டு சென்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

crocodile swallowed 10yearold boy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->