நள்ளிரவில் பற்றியெரிந்த பட்டாசு குடோன்: பயங்கர தீ விபத்தில் கருகிய 5 கடைகள்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, ரங்கா ரெட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடையில் தற்போது தீபாவளி என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

நேற்றிரவு பட்டாசு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்ற நிலையில் நள்ளிரவு கடையில் மின்கசிவு ஏற்பட்டு பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த குடோனுக்கும் தீ பரவியது. 

அதன் பிறகு அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்கு தீ பரவி அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பட்டாசு கடைக்கு அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள் பீதி அடைந்து அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினார். 

பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். 

இருப்பினும் தீ வேகமாக பரவி அருகில் இருந்த 4 கடைகள் எரிந்து நாசமாகின. இதனால் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். 

நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crackers suddenly caught fire 5 shops burnt 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->