இந்தியாவின் ஊழல் தலைநகரம் கர்நாடகா - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஊழலின் தலைநகரமாக கர்நாடகா மாறி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஊழல் தலைநகரமாக கர்நாடகா மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். முன்பு பசுவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்திப்பதாக பாஜக கூறியது ஆனால், இப்போது மோடி தலைமையில் தேர்தலை சந்திப்பதாக கூறுகிறார்கள்

விரைவில் பாஜக இல்லாத கர்நாடகா உருவாகும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 7வது ஊதிய குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அமல்படுத்தப்படும். பாஜகவில் எடியூரப்பாவுக்கு கொடுத்த தொல்லை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சிவமொக்கா விமான நிலைய தொடக்க விழாவில் எடியூரப்பா மீது பிரதமர் மோடி அதிக அளவு அன்பு காட்டினார். ஆனால் இந்த அன்பை ஏன் இத்தனை நாளாக காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader TK Rajkumar speech about BJP and Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->