காங்கிரஸ் கட்சித் தலைவர் சுட்டு கொலை..! பட்டப்பகலில் பயங்கரம்..!
congress leader murder in bihar
பீகாரில், இன்று காலை மர்ம நபர்களால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் கொடூரமாக சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னை எப்போதும் இருக்கிறது. இந்நிலையில் பீகாரில் இன்று காலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகேஷ் குமார் யாதவ் வழக்கம் போல ஜிம்முக்கு சென்றிருக்கிறார்.
ஜிம் அருகே சென்றபோது, அவர் எதிரே வந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கி எடுத்து ராகேஷ் குமாரை சுட்டார்கள். பின்னர் மோட்டார் பைக்கில் வேகமாக தப்பி சென்றார்கள். சுட்டுக் கொன்றவர்கள் யார் என்று எந்த தகவலும் தெரியவில்லை. இதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினார்கள்.
மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, அரசியல் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் டி.எஸ்.பி தெரிவித்திருக்கிறார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
congress leader murder in bihar