தீபாவளி நெருங்குவதையொட்டி, புதிய கட்டுப்பாடு! மத்திய சுங்கத்துறை அறிவிப்பு!!
central customs department new announcement
தீபாவளி நெருங்குவதையொட்டி சீன பட்டாசு குறித்து மத்திய சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த எச்சரிக்கையில், சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வதோ, விற்பனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
சீன பட்டாசுகளை பதுக்கி வைத்தல், பயன்படுத்துதல் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன பட்டாசில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளது.
சீன பட்டாசை வாங்கி விற்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று மத்திய சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
சீன பட்டாசு விற்பனை குறித்து புகார் அளிக்க 044 - 25246800 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று மத்திய சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
central customs department new announcement