மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி.!
Central civil aviation minister affected covid
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் குஜராத் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதனால், மத்திய அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி தமிழகத்தில் சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆனாலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது உயிரிழப்புகளும் அடுத்தடுத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Central civil aviation minister affected covid