திருமணத்திற்கு முன் எச்சரிக்கை அவசியம்...! - பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை
Caution necessary before marriage Court stern warning case
திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு, நேற்று உச்சநீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு விசாரித்தது.மேலும், விசாரணையின் போது நீதிபதிகள் பல முக்கியமான சமூக மற்றும் சட்டப்பூர்வக் கருத்துகளை முன்வைத்தனர்.

“திருமணத்திற்கு முன் ஒரு ஆணும் பெண்ணும் அடிப்படையில் அந்நியர்களே. அவர்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், எதிர்காலம் உறுதியில்லாத நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பல சிக்கல்களை உருவாக்கும்.
அதன் விளைவுகளை முன்கூட்டியே சிந்தித்து, மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்” என்று நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்தார். “நாங்கள் பழமைவாதிகள் போலத் தோன்றலாம்; ஆனால் வாழ்க்கை முடிவுகளில் எச்சரிக்கை அவசியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புகார் அளித்த பெண் குற்றம் சாட்டப்பட்ட நபருடன் சம்மதத்தின் அடிப்படையில் உறவில் இருந்ததாக பதிவுகள் தெரிவிப்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதனை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கி வழக்கை சமரசமாக முடிக்க முடியுமா என இரு தரப்பினரும் ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Caution necessary before marriage Court stern warning case