#காரைக்கால் || கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது - Seithipunal
Seithipunal


சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை செய்ததில் தலத்தெரு சிவன் கோவில் தெருவை சேர்ந்த யோகேஸ்வரன்(22) மற்றும் சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த ரகுராம்(25) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 36 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cannabis sellers arrested in Karaikal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->