மர்ம முறையில் இறந்து கிடந்த தாய், மகன் - போலீசாரின் கிடுக்கு பிடியில் சிக்கிய கணவர்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, அனந்தபூரை சேர்ந்தவர் நவநீதா (வயது 35) இவருக்கும் கர்நாடகா ரவீந்திரநாதா குடே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

இவர்களுக்கு ஸ்ருஜன் (வயது 8) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவநீதா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நவநீதா அவரது மகனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் தனியாக வசித்து வந்தார். 

இவரது வீட்டின் அருகிலேயே சந்துரு மற்றொரு வீட்டில் குடியேறினார். இதனால் அடிக்கடி சந்துரு மது அருந்திவிட்டு நவநீதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனை அடுத்து தாயும் மகனும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது நவநீதா மற்றும் அவரது மகன் இருவரும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். 

பின்னர் போலீசார் இவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவநீதாவின் கணவர் சந்துருவை சந்தேகத்தின் பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே சமயத்தில் தாயும் மகனும் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru mother son murder case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->