வழக்கு தள்ளுபடி விவகாரம், வங்கிகடனாளி விஜய் மல்லையா பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு லண்டன் தப்பிச் சென்ற நபர் விஜய் மல்லையா. இவர் தனது தொழிலை பெருக்குவதாக கூறி, தனது சொத்துக்களை வெளிநாடுகளில் பெருக்க பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றுள்ளார். 

இவருக்கும் இந்திய வங்கிகள் தாராளமாக கடன் தொகையை கொடுத்து இருந்த நிலையில், ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்த வக்கில்லாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதனையடுத்து பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு, இவருக்கு இந்தியாவில் சொந்தமாக இருக்கும் பங்களாக்கள், வீடுகள் போன்றவை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில், லண்டன் தப்பிச் சென்றுள்ள இந்திய கடனாளி விஜய் மல்லையா, லண்டனில் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி சுற்றி வரும் நிலையில், இவரைக் கைது செய்து இந்தியா அழைத்துவர இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக விஜய் மல்லையா அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதுகுறித்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்து இருந்தனர். 

இந்த தீர்ப்பு குறித்து விஜய் மல்லையா தெரிவிக்கையில், இந்த தீர்ப்பு தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. என் சட்டக்குழுவின் அறிவுரையின் படி, நாடுகடத்தும் உத்தரவிற்கு எதிர்ப்பக போராடுவேன்.. எனது கடன் தொகையாக ரூ.9 ஆயிரம் கோடி என்று ஊடகம் கூறி வருகிறது. இது தவறு, எனக்கு ரூ.900 கோடி கடனிற்கு வழக்கு நடக்கிறது. இந்த பணத்தை வங்கிகள் ஏற்க மறுப்பு தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bank loan fraud culprit Vijay Mallya speech about appeal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->