விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உடலில் இரத்த காயங்கள்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Bangalore child death police investigation
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கடந்த 10 ஆம் தேதி 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தை உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தது.
இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர்.
அப்போது கார் ஒன்று குழந்தை மீது மோதியது தெரியவந்தது. மேலும் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது கார் குழந்தையின் மீது ஏறி இறங்கியதால் குழந்தை பலத்த காயம் அடைந்து கதறி அழுந்துள்ளது.
ஆனால் கார் ஓட்டுநர் குழந்தையை காப்பாற்ற முன்வராமல் உடனடியாக காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவங்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக போலீசார் கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Bangalore child death police investigation