காதலில் எல்லை மீறுவது பழசு.. காதலனுக்காக எல்லை தாண்டிய காதலி.!
bangaladesh women marry indian men
வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு 22 வயது இளம்பெண் இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தல் என்ற இளைஞருடன் முகநூல் மூலமாக பழகியுள்ளார். இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்த நிலையில் அவருக்கு இந்தியா வர பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.
இருப்பினும், தனது காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்த இளம்பெண் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவெடுத்துள்ளார். அவரது திட்டப்படி சுந்தரகோட்டை வந்து பின்னர் அங்கிருந்து நதியில் ஒரு மணி நேரம் நீந்தி இந்தியாவிற்கு வந்தார்.
மூன்று நாட்கள் கொல்கத்தாவில் தங்கிவிட்டு பின்னர் காதலனை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட அவர்கள் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரை வங்கதேச உயர் ஆணையத்திடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
English Summary
bangaladesh women marry indian men