அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்! வைரலாகும் விராட்கோலி புகைப்படம்!
Ayodha Ram Mandir viratkholi anushkasharma
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி நடக்க உள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என்று சுமார் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனிக்கு ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ayodha Ram Mandir viratkholi anushkasharma