''ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்'' - அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு குற்றசாட்டு! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்காக பாஜக சதி திட்டம் தீட்டுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 7 பேரிடம் தலா ரூ. 25 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை அரவிந்த கேஜரிவால் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அதில், ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களும் பாஜகவின் கோரிக்கையை மறுத்துள்ளனர். டெல்லியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது. 

மதுபான வழக்கில் தன்னை கைது செய்யும் திட்டமும் பாஜகவின் முயற்சி தான். இதனை மறுத்த டெல்லி பாஜக செயலாளர் ஹரிஷ் குரானா, ஆம் ஆத்மி யாரிடம் பேரம் பேசப்பட்டது என்பதையும் யார் பாஜகவில் இருந்து பேசினார்கள் என்பதையும் வெளியிடுமாறு தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, அமலாக்கத்துறை விசாரணையின் மீதான கவனத்தை அரவிந்த கேஜரிவால் மீது திசை திருப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind kejriwal sensational accusation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->